பதிவு செய்த நாள்
04
டிச
2020
12:12
உடுமலை: பிரசன்ன விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. பவுர்ணமிக்கு அடுத்துவரும் நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தியாக வழிபாடு நடத்தப்படுகிறது. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் கோவிலில் நடக்கிறது.நேற்று இதையொட்டி, பிரசன்ன விநாயகர் கோவிலில், விநாயகர் சுவாமிக்கு பால், பன்னீர், உள்ளிட்ட திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி விநாயகருக்கு, நேற்று மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அதன்பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து விநாயகரை வழிபட்டனர் - நிருபர் குழு-.