தஞ்சாவூர், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. 900 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோவில், மத்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. சிறிய மழை பெய்தாலும், கோவில் முழுதும் தண்ணீர் தேங்கி விடும். இரண்டு நாட்களாக பெய்த மழையால், கோவிலில், நான்கு பிரகாரங்கள், அம்மன் சன்னிதி, நந்தி மண்டபம் உட்பட, கோவில் வளாகம் முழுதும் மழை நீர் தேங்கி நிற்கிறது.