புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இது குறித்து புதுச்சேரி வேதபாரதி அமைப்பு விடுத்துள்ள அறிக்கை: அகில உலகில் அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கின்ற பெரும் சக்தியான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியநமஸ்காரம் என்கின்ற நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. இந்த சூரியநமஸ்காரம் நிகழ்ச்சி நாளை 6ம் தேதி காலை 5:30 மணியில் இருந்து 7:30 மணிவரை புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இது சூரியபகவானை போற்றும் வேதங்களின் பகுதிகளை விரிவாக எடுத்துச் சொல்லி அதன் விளக்கத்தோடு சூரிய பகவானை வழிபாடு செய்வதற்கு ஓர் அரிய வாய்ப்பாகும். கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமையில் இந்நிகழ்ச்சி நடைபெறுவது மிகவும் சிறப்பாகும். நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று சூரியநாராயணன் அருள்பெற அழைக்கின்றோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.