நியூயார்க் நகரைச் சேர்ந்த இளம் போதகர் ஒருவர் பஸ்சில் ஒரு டாலர் கொடுத்து டிக்கட் கேட்டார். சில்லரை வாங்கிய போது பத்து பென்ஸ் அதிகம் இருந்தது. திரும்ப கொடுக்காவிட்டாலும் பாதிப்பு ஏற்படாது என நினைத்தார். ஆனால் முதல்நாள் பிரசங்கத்தில், ‘பிறரை ஏமாற்றுவது குற்றம்’ என தான் பேசியது ஞாபகத்திற்கு வந்தது. உடனே பத்து பென்ஸை ஒப்படைத்தார். புன்னகைத்த கண்டக்டர், ‘‘வேண்டுமென்றே உங்களுக்கு அதிக சில்லரையைக் கொடுத்தேன். பிரசங்கிப்பதை வாழ்வில் பின்பற்றுகிறீர்களா என அறிய விரும்பினேன். உங்களுக்கே வெற்றி கிடைத்தது’’ என்றார். இதன் மூலம் போதகர் தன் பேச்சும், செயலும் ஒன்றாக இருப்பதை நிரூபித்தார். ‘‘திரளான பணத்தை விட நற்புகழே கொள்ளத்தக்கது’’ என்னும் வசனமே அவரை நற்செயல் செய்யத் துாண்டியது.