* வீட்டிலும், வெளியிலும், எங்கும், எப்போதும் நேர்மையைப் பின்பற்றுங்கள். * உண்மையை பேசுங்கள். ஏமாறவோ, ஏமாற்றவோ இடம் அளிக்காதீர்கள். * தன்னுள் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவன் ஞானி. * கோவில் வழிபாட்டால் ஊர் ஒற்றுமை, வீட்டு வழிபாட்டால் குடும்ப ஒற்றுமை ஏற்படும். * வாக்கு கொடுப்பது எளிது. ஆனால் நிறைவேற்றுவது கடினம். * தீமை எனத் தெரிந்த பின்னும் நல்வழியில் செல்லாமல் இருப்பது அறிவீனம். * அன்பால் பகை அழியும். இன்பம் உண்டாகும். எல்லா உயிர்களையும் நேசியுங்கள். * பயம், சந்தேகம், சோம்பல் ஒழிந்தால் நல்ல காலம் பிறந்து விடும். * கடவுளை சரணடைந்தால் ஒளி, வலிமை, அழகு, மகிழ்ச்சி என எல்லாம் உண்டாகும். * தியானத்தின் மூலம் விரும்பியதை நம்மால் அடைய முடியும். * மனதில் நல்லெண்ணம் வளர வேண்டும். மறந்தும் தீமையை அனுமதிக்காதீர். * காலத்தை வீணாக்கினால் அதற்குரிய லாபம் கிடைக்காமல் போகும். * பேச்சு, செயலில் முரண்படும் மனிதர்களிடம் உறவாடக் கூடாது. * இடையூறு குறுக்கிட்டாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக நில்லுங்கள்.