மேட்டுப்பாளையம்: காரமடை அடுத்த மருதூரில் உள்ள, அனுமந்தராய சுவாமி கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. பொங்கல் விழாவை முன்னிட்டு, கரும்பில் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அனுமன் ஜெயந்தி விழாவை, காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். விழாவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, ஆஞ்சநேய அறக்கட்டளை நிர்வாகி துரைராஜ், பாண்டுரங்கன், துரைசாமி உட்பட பலர் செய்திருந்தனர். அறக்கட்டளை நிர்வாகி வெள்ளிங்கிரி நன்றி கூறினார்.