Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அதிகாயன் கைகேயி கைகேயி
முதல் பக்கம் » பிரபலங்கள்
முசுகுந்த சக்கரவர்த்தி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 மே
2012
01:05

ஒரு சமயம் கயிலாய மலையில் சிவபெருமானும் பார்வதி தேவியும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அங்குள்ள வில்வ மரங்களில் முசுவின் (குரங்குக்) கூட்டங்கள் தங்கியிருந்தன. அவற்றில் வயது முதிர்ந்த ஆண் முசு (குரங்கு) ஒன்று, வில்வ மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து, கீழே அமர்ந்திருந்த பார்வதி - பரமேஸ்வரர் மீது போட்டுக் கொண்டிருந்தது. அம்பிகைக்கு சற்றே கோபம் வந்தது. ஆனால் சிவபெருமான், தேவி ! இங்கே நம்மை அர்ச்சிக்கும் இந்த முசுவை கோபிக்கலாமா? என்று அவளை அமைதிப்படுத்தினார். உமையும் மனமிரங்கி முசுவுக்கு அருள்புரிய எண்ணினாள். அதேகணம், அந்த முசுவின் மனதிலுள்ள அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞ் ஞானத்தை அருளினார் பரமன். ஞானம் பெற்ற குரங்கு விரைவாக கீழே இறங்கி வந்து அம்மையப்பனை வணங்கி, தனது பிழையைப் பொறுத்தருள வேண்டியது. நீ எதுவும் பிழை செய்யவில்லை; சிறந்த வில்வ பத்திரங்களால் (இலைகளால்) எம்மைப் பூசித்தாய். ஆகவே, நீ மனு வம்சத்தில் பிறந்து உலகம் முழுவதையும் அரசாள்வாயாக என்று அருள்புரிந்தார் பரமேஸ்வரன். அதைக்கேட்ட முசு, எப்போதும் தங்களையே தரிசித்துக் கொண்டு, அழியாத அந்தப் பேரானந்தத்துடன் இங்கேயே இருந்து விடுகிறேன். பூமியில் பிறந்தால் செல்வத்தின் வலையில் சிக்கி அழிவே உண்டாகும். மீண்டும் பிழைப்பது எப்படி? என்றது. உடனே சிவனார், முசுவே... உன் மனதில் தோன்றியது சரிதான். ஆனாலும் கவலை வேண்டாம். இப்போது பூமியில் பிறந்து அரசாண்டு, பிறகு நம்மிடம் வருவாயாக! என்றார். அதற்கு தலைவணங்கிய முசு, எம்பெருமானே... மானிடப் பிறவி எடுத்தாலும் உலக மாயையில் மயங்காதபடி, இந்தக் குரங்கு முகத்துடனேயே பிறக்கும்படி அடியேனுக்கு அருள்புரியுங்கள் என்று வேண்டியது. பெருமானும் அவ்வாறே வரம் தந்தருளினார். சத்தியம் காக்க தமது செல்வம், ஆட்சி, மனைவி, மகன் அனைத்தையும் இழந்த அரிச்சந்திர மகாராஜா வம்சத்தில், குரங்கு முகத்துடனும், மற்ற அவயவங்கள் மிக்க அழகுடைய மன்மதனைப் போன்றும் திகழ, அந்த முசு பூமியில் பிறப்பெடுத்தது. அந்தக் குழந்தைக்கு முசுகுந்தன் என்று பெயரிட்டனர்.

முசுகுந்தன் நன்கு வளர்ந்து சோழ நாட்டில் கருவூரில் இருந்து கொண்டு அரசாளத் தொடங்கினான். இந்நிலையில், சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்து, தேவர் பதியை மீட்ட செய்தி முசுகுந்தனுக்கு எட்டியது. கந்தவேளுக்கு, இந்திரன் தன் மகள் தேவசேனாவை திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொடுக்க இருக்கும் செய்தியையும் இந்திர தூதர்கள் முசுகுந்தரிடம் தெரிவித்தனர். அகமகிழ்ந்த முசுகுந்தன், இந்த இனிய செய்தியை சொன்ன உங்களுக்கு என்ன பிரதியுபகாரம் செய்யலாம்? என் செல்வங்கள் அனைத்தையும் தரவா? என் அரசாட்சியைத் தரவா? என்று மகிழ்ச்சிக் களிப்பில் கேட்டார். அவரின் அன்பு பக்தியைக் கண்டு இந்திர தூதர்கள் மகிழ்ந்து, அரசே.. தூதுவராகிய எங்களுக்கு இவை ஏற்கக் கூடியதல்ல! நீங்கள் திருமணத்தில் கலந்துகொள்வதே இதற்குச் சமம் என்றனர். முசுகுந்தனும் அவரது நாட்டு மக்களும் யானை, குதிரை முதலான படைகளோடும், கொக்கரை, படகம், பேரி, குடமுழா முதலான இசைக் கருவிகளை ஒலிக்கச் செய்து கொண்டும் திருப்பரங்குன்றத்தை அடைந்தனர். அங்கு முசுகுந்தர் தங்குவதற்குத் தனி மாளிகையையே அமைத்திருந்தனர். இந்திரன்-இந்திராணி மற்றும் தேவர்களைக் கண்டு வணங்கினார் முசுகுந்தர். அனைவரும் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். தெய்வானை செம்பவள நிறத்தில் புடவை அணிந்து பலவித நகைகளைச் சூடி, திருமகள், கலைமகள், அரம்பையர் புடைசூழ மணப்பெண் கோலத்தில் காட்சியளித்தாள். அழகெல்லாம் திரண்டு ஒரு வடிவமாக அமைந்த ஆறுமுகப் பரமன் மயில் வாகனத்தில் அமர்ந்து வீதியில் உலாவர, சூரிய-சந்திரர் வெண்கொற்றக் குடையைத் தாங்கினர். வாயு சாமரம் வீசினான். வருணன் ஆலவட்டம் அசைத்தான். எமன் வாட்படையை ஏவினான். அரம்பையர் ஆடினர். முனிவர்கள் ஸ்தோத்தரித்தனர். பலவித வாத்யங்கள் ஒலித்தன. குமரன் திருமணச் சாலையை அடைந்தார். தேவர்கள், முனிவர்கள், அரசர்கள் அழகு முருகனை வணங்கித் துதித்தனர். சிவபெருமான் உமாதேவியோடு ஆகாய விமானத்தில் வந்து திருப்பரங்குன்ற பூமியில் எழுந்தருளினார். தாய்- தந்தையை வணங்கி பாத பூஜை செய்து மகிழ்ந்தார் கந்தவேள். இந்திரன், இந்திராணி மற்றும் தேவர்கள், அரம்பையர் புடைசூழ தெய்வானையும் திருமண மண்டபத்தை அடைந்தாள். பிரம்மன் திருமணச் சடங்குகளைச் செய்ய, முருகனும் - தெய்வானையும் சிவாக்னியை வலம் வந்து, அம்மி மிதித்து.. என திருமணச் சடங்குகள் நடைபெற்றன; தெய்வானைக்கு திருமுருகன் மங்கலநாண் பூட்டினார். பிறகு அந்தத் தம்பதி, சிவ - பார்வதியை வணங்கி ஆசி பெற்றனர். முருக பக்தரான முசுகுந்தரும் கந்தனை துதித்து வாழ்த்திய பிறகு, நாட்டு மக்களுடன் கருவூர் திரும்பினார்!

முசுகுந்தர் ஒரு நாள் வசிஷ்ட முனிவரைச் சந்தித்து வணங்கி, சுப்ரமணியருக்கு உரிய விரதங்களை விவரமாகச் சொல்லும்படி வேண்டினார். வசிஷ்டரும் விவரிக்க ஆரம்பித்தார்: சுக்ரவார விரதம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் கந்த விரதங்களில் ஒன்று. இதனை அனுஷ்டிப்பவர்கள், மனதில் நினைத்த எல்லாமும் கிடைக்கப் பெறுவர். பகீரதன் எனும் பேரரசன் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தையும் அரசாட்சியையும் பெற்றான் என்ற வசிஷ்டர், அடுத்து நட்சத்திர விரதம் பற்றி கூறினார். நாரதர் விநாயகக் கடவுள் அருளியபடி கந்தனுக்குரிய கார்த்திகை நட்சத்திர விரதத்தை 12 ஆண்டுகள் மேற்கொண்டு ஏழு முனிவர்களுக்குள் மேலான பதவியைப் பெற்றார். இதே விரதத்தை மேற்கொண்ட வேதியன் ஒருவன் மறுபிறப்பில் திரிசங்கு என்ற மன்னனாகப் பிறந்து அரசாண்டான். இதைத் தவிர ஐப்பசி மாதத்து வளர்பிறை பிரதமை முதல் ஆறு நாட்கள் காலையில் நீராடி நித்யவழிபாடுகளைச் செய்து முருகனை கும்பத்தில் விதிப்படி ஆவாஹனம் செய்து பூஜித்து, வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோதகத்தை (கொழுக்கட்டையை) நிவேதித்து அன்று (ஆறாவது நாள்) உபவாசம் இருந்து பாராயணம் செய்து, மறுநாள் சப்தமி (ஏழாவது) திதியன்று கந்தவேளுக்கு விசேஷ பூஜை வழிபாடு செய்து.. இவ்வாறாக சஷ்டிவிரதம் அனுஷ்டித்தவர்களுக்கு எல்லாவிதமான செல்வம், யோகம் பெற்று வாழ்வாங்கு வாழ்வர் என்று உபதேசித்தார் வசிஷ்டர்.

முசுகுந்தரும் முருகனுக்கு உரிய விரதங்களை கடைப்பிடித்தார். கந்தவேள் அவருக்குக் காட்சியளித்து வேண்டும் வரங்கள் என்ன? என்று வினவினார். ஆறுமுகப் பரமனே! என் அரசாட்சி உலகெலாம் நன்கு நடைபெற, தங்களிடம் உள்ள வீரபாகு முதலான வீரர்கள் எனக்குத் துணைபுரிய அருள வேண்டும் என்று வேண்டினார். கந்தனும் அவ்வாறே வீரபாகு முதலான சேனைத் தலைவர்களை முசுகுந்தனுக்கு உதவுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் மானுட அரசனுக்குத் தொழில் புரிய மாட்டோம் என்று பதிலுரைத்தனர். எமது விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் மறுத்ததால், நீங்கள் மனிதர்களாகப் பிறந்து, அதே முசுகுந்தனுக்குப் போர்வீரர்களாகக் கடவீர். பிறகு நோன்பிருந்து எம்மிடம் திரும்பிவருக! என்று கட்டளையிட்டார் கந்தன். தமது பிழையை உணர்ந்த அவர்கள் முருகன் திருவடிகளை வணங்கி அவ்வாறே முசுகுந்தனுக்குச் சேனை வீரர்களாக வந்து சேர்ந்தனர். மானுடனாக வந்த வீரபாகு புஷ்பகந்தி என்பவளை மணந்து இல்லறம் நடத்தினார். தான் பெற்ற சித்ரவல்லி என்ற பெண்ணை முசுகுந்தனுக்குத் திருமணம் செய்து வைத்தார். முசுகுந்தன் இந்திரனுக்கு துணையாகச் சென்று அரக்கனை அழித்தார். இந்திரன் தாம் பூஜித்த சோமாஸ்கந்தரான விடங்க மூர்த்தியை முசுகுந்தனுக்கு அளிக்க, அவர் அதனை திருவாரூர் முதலான ஏழு தலங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். முசுகுந்தன் தமது மகன் அங்கிவர்மனுக்கு முடிசூட்டி, பிறகு கயிலை சென்று சிவனாரின் திருவடிகளில் இளைப்பாறினார். வீரபாகு தேவர் முதலானோர் தவம் இயற்றி மானுடத் தன்மை நீங்கி மீண்டும் கந்தபுரியை அடைந்தனர். மிகச்சிறந்த முருகனடியாரான முசுகுந்தரது பெருமைகளை கந்த புராணம் இனிது உரைக்கின்றது.

காணரும் தேவசேனை கடிமணம் கண்டுவந்தோன்
மாண் உறும் வீரவாகு துணைவரப் பெற்றோன்; வானோர்
பேணு தியாகர் ஏழுபேரையும் கொண்டு வந்தோன்
ஆணவம் அகற்ற அன்றே முசுமுகன் ஆனோன் வாழி!  (-தணிகை மணியார்)

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar