திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், 81ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. காலை 8:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்தில், அர்ச்சனை, மகாதீபாராதனை நடந்தது. கோவிலைச் சுற்றி தீபம் ஏற்றப்பட்டது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில் பக்தர்கள் பலரும் பங்கேற்றனர்.