திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் லட்சார்ச்சனை, கோவிலை சுற்றி தீபம் ஏற்றப்பட்டது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் நடைபெற்ற இவ்விழாவில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.