பதிவு செய்த நாள்
13
ஜன
2021
12:01
திட்டக்குடி: திட்டக்குடி, லக்கூர், கூடலூர், கீழக்கல்பூண்டி பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன்ஜெயந்தி விழா நடந்தது.
திட்டக்குடி பக்த ஆஞ்சனேயர் கோவிலில் அனுமன்ஜெயந்தி விழாவையொட்டி அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், சிறப்பு அபிஷேகம், திருப்பாவை ஓதுதல், சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 10:30 மணிக்கு வெள்ளிக்கவச அலங்காரம், பூ அலங்காரத்தில், வடைமாலை சாத்துதல் நடந்தது. தொடர்ந்து 1008 சகஸ்ர நாமாவளி அர்ச்சனை செய்து, ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதேபோல் லக்கூர் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், வடைமாலை, பழமாலை சார்த்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. லக்கூர் கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.