அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னூர் பயணியர் மாளிகை முன்பு பா.ஜ., வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில், ஒன்றிய இளைஞரணி தலைவர் தனிஷ் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சிவக்குமார் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ பேச்சு குறித்து பேசினார். இளைஞர் அணி பொதுச் செயலாளர் கோகுல்நாத் மகளிரணி ஒன்றிய தலைவர் பாக்கியவதி இளைஞரணி மாவட்ட செயலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தாமரை சொந்தங்கள் சார்பில், அன்னூர் கைகாட்டியில், ஜன சேவா தலைவர் ராஜேந்திரன் தலைமையில், விழா நடந்தது. முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் ராஜராஜ சாமி, விவேகானந்தர் குறித்து பேசினார். நிர்வாகிகள் பிரவீன், நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.