* தாயன்பு போல கலப்படம் அற்றது வேறேதுவும் இல்லை. * மனைவியை தன் வருமானத்திற்குள் வாழ வைப்பதே கணவருக்கு கவுரவம். * குழந்தையை போல் கபடம் இல்லாமல் வாழப் பழகுங்கள். * கடவுளை நினைத்து செய்யும் எந்த செயலுக்கும் பலன் உண்டு. * முன்னோருக்கு செய்ய வேண்டிய காரியங்களில் அக்கறையும், தெய்வ செயல்களுக்கு பக்தியும் வேண்டும். * எந்த நிலையில் இருந்தாலும் கடவுளின் குணங்களை கேட்பதை லட்சியமாக கொள்ளுங்கள். * முதலில் வெளியில் அடக்கம் ஏற்பட்டால் தான் மனதில் அடக்கம் ஏற்படும். * வாழ்க்கை என்பது லாப, நஷ்ட கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல. * மற்றவர் துன்பத்தை நீக்க நம்மால் ஆனதை செய்ய வேண்டும். * எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக இருப்பது நல்லது.. * மனம் எதை இடைவிடாமல் நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். * எதிலும் அலட்சிய புத்தி இருப்பது நல்லதல்ல. * ஓடி ஓடி சம்பாதித்தாலும் ஒரு பைசா கூட நம்முடன் வராது. * மறுஉலகில் உற்ற துணையாக இருப்பது கடவுளின் திருநாமம் ஒன்றே. * ஒழுக்கமும், மனக்கட்டுப்பாடும் மன அழுக்கை போக்கும். * உடல் உழைப்பால் பிறருக்கு சேவை செய்வது பெரும் புண்ணியம். * பசியை தீர்க்கத்தான் உணவே தவிர ருசியைத் தீர்ப்பதற்கு அல்ல.