மகிழ்ச்சியுடன் கொண்டாட தை முழுவதும் விழா மயமாக இருக்கும். முதல் நாள் தைப்பொங்கல். சூரியனை பொங்கலிட்டு நன்றியுடன் வழிபடுகிறோம். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். கால்நடைகளுக்கு பொங்கல் இட்டு நன்றி செலுத்துகிறோம். மூன்றாம் நாள் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்னும் வீரவிளையாட்டு நடைபெறும். சில பகுதிகளில் ஆறு, கடற்கரையில் உறவினர், நண்பர்களுடன் கூடி மகிழும் காணும் பொங்கலாக கொண்டாடப்படும். மகர ஜோதியாக சபரி மலை ஐயப்பன் தையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தை வெள்ளிக்கிழமைகளில் ‘தை வெள்ளி விரதம்’ இருந்து அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவர். தைஅமாவாசையன்று தீர்த்தக் கரைகளில் முன்னோர் வழிபடுவது சிறப்பு. தை பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் சேரும் தைப்பூச விழா நடக்கும். இந்நாளில் காவடி, பால்குடம் எடுத்து முருகன் கோயில்களில் அபிேஷகம் செய்வர்.