பொங்கலை ஒரு பண்டிகையின் பெயராக வைத்திருப்பது வேடிக்கையாக தோன்றலாம். ஆனால், இதன் உண்மையை உணர்ந்தால் பெருமை விளங்கும். பொங்கல் என்பது ‘பொங்கு’ என்பதில் இருந்து வந்ததாகும். வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் என எல்லா நலன்களும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் பொங்க வேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தும் விழாவாக இது உள்ளது. இதனடிப்படையில் பானை பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என அனைவரும் சொல்லி ஆரவாரம் செய்வர். மங்கல ஒலியாக குலவையிடுவர்.