பொங்கல் பண்டிகையை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். உழவு தொழிலுக்கு முதன்மையாக உள்ள சூரிய பகவானுக்கு வழிபாடு நடத்தும் வகையில் தமிழர் திருநாள் பொங்கல் விழா, தை மாதம் முதல் தேதி கொண்டாடப்படுகிறது. கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தை முதல் நாளையொட்டி, விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சுப்ரமணியர், சண்டிகேசுவரர், சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து விருத்தகிரீஸ்வரர், தாயார், சூரிய பகவான் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.