பதிவு செய்த நாள்
14
ஜன
2021
07:01
பொங்கலை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் பிள்ளையார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோத்தகிரி பகுதியில் உள்ள கோவில்களில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
கோத்தகிரி கடைவீதி ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோவிலில் கோவிலில், அதிகாலை முதல் பக்தர்கள் பொங்கல் வைத்தனர். பிறகு, சிறப்பு பூஜை செய்து, அம்மனுக்கு படையலிட்டு வழிப்பட்டனர். இந்நிகழ்ச்சியில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல, கோத்தகிரி கடைவீதி ஸ்ரீ மாரியம்மன் கோவில், அருள்மிகு விநாயகர் கோவில், சக்தி மலை முருகன் கோயில் உட்பட, கிராமப்புற கோயில்களிலும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.