மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்தனர். பெண்கள் கும்மியடித்து, விழாவில் பங்கேற்றவர்களுக்கு, பொங்கல் வழங்கினர். இதேபோன்று பேட்டைமாரியம்மன் கோவிலிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது. ஜடையம்பாளையம் ஊராட்சி உட்பட்ட, ராமம்பாளையத்தில் பொங்கல் விழா நடந்தது. கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். அதை அடுத்து மாலையில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுவர்களுக்கு பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடந்தன.