* நெருக்கடி நேரத்தில் நிதானம், பொறுமையை இழக்காதீர். * உங்களுக்கு விதிக்கப்பட்டது தான் நடக்கும். அதை மாற்ற முடியாது. * கண்ணுக்கு தெரியாவிட்டாலும் கடவுளின் அருளே நம்மை வழிநடத்துகிறது. * தியானத்தால் மனம் பக்குவம் பெறும். வாழ்க்கை சிறக்கும். * அன்புடன் தரும் எளிய காணிக்கையைக் கூட கடவுள் ஏற்பார். * மனம் என்னும் வீட்டில் இருந்து நம்மை இயக்குபவர் கடவுளே. * எதிர்பார்ப்பு இன்றி செய்யும் தர்மமே உற்ற துணை. * மனநிறைவுடன் செயல்படும் போது உடலின் துன்பம் பெரிதாக தோன்றாது. * ஆன்மிகத்தில் வளர்ச்சி பெற ஒழுக்கமும், நற்பண்புகளும் அவசியம். * வாழ்க்கையை எப்படி எதிர் கொள்கிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது. * விரதம் இருப்பதால் உடலும், மனமும் புத்துணர்வு பெறுகிறது. * எல்லா உயிர்களிலும் கடவுளைக் காண்பவனே உண்மையான பக்தன். * புராணங்களின் மூலம் ஆன்மிகம் எளிய மனிதர்களையும் சென்றடைகிறது.