கோயில்களில் மாடுகளுக்கு கீரை கொடுப்பது வழக்கம். ஜாதகத்தில் சுக்கிரன் பலம் இழந்து (நீசம்) இருந்தால் திருமணத்தடை, குடும்பத்தில் ஒற்றுமையின்மை போன்ற பிரச்னை ஏற்படும். பசுவுக்கு துன்பம் இழைத்தவர்களுக்கு வழிவழியாக துன்பம் தொடரும். இதனால் தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கு அகத்திக்கீரை, புல், பழம் கொடுக்கலாம். அப்போது, “காமதேனு வம்சத்தை சேர்ந்தவளே! எல்லோருக்கும் நன்மை தருபவளே! பரிசுத்தமானவளே! புண்ணியம் மிக்கவளே! மூவுலகிற்கும் தாயாகத் திகழ்பவளே! இந்த புல்லை உண்டு மகிழ்வாயாக! பசுத்தாயே! உன் மேனி முழுவதும் எல்லா உலகங்களும் பரந்து விரிந்திருக்கின்றன. இந்த பூலோகத்திலும், பரலோகத்திலும் எனக்கு மங்களத்தை அருள்வாயாக,” என்று சொல்ல வேண்டும்.