பசுவை பார்த்தாலே புண்ணியம். நல்ல விஷயமாக வெளியில் கிளம்பும் போது கன்றுடன் கூடிய பசுவைக் கண்டால் வெற்றி கிடைக்கும். மாட்டுக் கொட்டில் இருக்கும் வீட்டில் தெய்வ அருள் நிறைந்திருக்கும். கொட்டிலுக்கு ‘கோஷ்டம்’ என பெயர். இதைக் காட்டிலும் புனிதமான இடம் வேறில்லை. இங்கு அமர்ந்து மந்திரம் ஜபித்தால் கோடி மடங்கு பலன் கிடைக்கும்.