பசுவின் சாணத்தில் இருந்து திருநீறு தயாரிக்கும் முறையை சிவபெருமானே உலகிற்கு உபதேசம் செய்தார். திருநீறு அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியம் உண்டாகும். மதுரையை ஆட்சி செய்த கூன் பாண்டியனின் வெப்புநோயைப் போக்குவதற்காக திருஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடினார். திருநீறு பூசிக் கொண்டு இந்த பதிகத்தை பாடுவோரிடம் மந்திரமோ, தந்திரமோ எடுபடாது. ஏனெனில் திருநீறு சிறந்த மந்திரம், தந்திரமாக இருப்பதாக திருஞானசம்பந்தர் கூறியுள்ளார்.