நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி பரமாநந்த பீயூஷரூபே நிர்லீநாநேக முக்தாவலி ஸுபகதமே நிர்மல ப்ரஹ்மஸிந்தௌ | கல்லோலோல்லாஸ துல்யம் கலு விமலதரம் ஸத்வ மாஹூஸ் ததாத்மா கஸ்மாந்தோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ் த்வத் கலாஸ்வேவ பூமந் || விளக்கம் கடலும், கடவுளும் குணத்தால் ஒன்று. ஏனெனில் கடலையும், கடவுளையும் யாராலும் கலக்க முடியாது. கம்பீரமானதும், வற்றாததும், தனக்குள்ளே முத்துக் குவியல்களை கொண்டதுமான கடலுக்கு இணையானவர் கடவுள். பரிபூரணத் தன்மையும், அமிர்தத்தை விட மேலான குணமும் கொண்டவர். புகழ்ச்சிக்கு மயங்காதவர் யாருமில்லை. நாமும் கடவுளை புகழ்ந்தால், கேட்டதை எல்லாம் அவர் கொடுப்பார். பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன் பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அறக் கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும் கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே என இதே கருத்தை ஆழ்வாரின் பாசுரமும் விளக்குகிறது.