காஞ்சிபுரம்; கீழ்கதிர்பூரில், காஞ்சிபுரம் விவசாயிகளின் பொங்கல் திருவிழா - 2021 விமரிசையாக கொண்டாடப்பட்டது.தமிழகம் இலவச கல்வி பயிற்சி மையம் சார்பில், காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில், காஞ்சிபுரம் விவசாயிகளின் பொங்கல் திருவிழா - 2021, நேற்று முன்தினம் நடந்தது.இவ்விழாவில், தமிழரின் பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான கலை நிகழ்ச்சி, வீர விளையாட்டு, விவசாயிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் ரத்ததான முகாம் நடந்தது. இதில், அனைத்து கட்சி பிரமுகர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.