மாரியம்மன் கோயில் தெப்பத்திற்கு வைகை ஆற்றிலிருந்து நீர் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2021 03:01
மதுரை : மதுரை வைகை ஆற்றில் இருந்து 5வது முறையாக மாரியம்மன் தெப்பத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 15 கன அடி வீதம் செல்கிறது.
ஆற்றில் இருந்து தெப்பத்திற்கு தண்ணீர் செல்லும் பனையூர் கால்வாய் துார்ந்து போயிருந்தது. 2019ல் நீதிமன்ற உத்தரவுப்படி இக்கால்வாய் துார்வாரப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு பிறகு 2019 இறுதியில் வைகை தண்ணீர் தெப்பத்திற்கு திருப்பப்பட்டது. இதில் தெப்பம் நிரம்பியது.அதன் பிறகு வைகையில்தண்ணீர் வரும்போதெல்லாம் தெப்பத்திற்கும் திருப்பப்படுகிறது. 4வது முறையாக 2020 டிச.,ல் திறக்கப்பட்டது. இதில் தெப்பம் முழுக் கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் ஆற்றில் செல்கிறது. இதனால் 5வது முறையாக மீண்டும் வைகைஆற்றில் இருந்து தெப்பத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வைகையில்இருந்து தெப்பத்திற்கு மீண்டும் தண்ணீர் திறந்துள்ளோம். தெப்பத்தில் 10 அடி வரை தண்ணீர் இருக்கிறது. இன்னும் 4 அடிக்கு மேல் நிரம்ப வேண்டும். இரு நாட்களில் முழுக்கொள்ளளவு நிரம்பிவிடும், என்றனர்.