உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் துயரறு சுடரடி தொழுது என் மனனே என்று திருவாய்மொழி பாடலில் நம்மாழ்வார் குறிப்பிடுவது போல நாராயண பட்டதிரி, குருவாயூர் கிருஷ்ணரை கற்பக விருட்சம் எனக் குறிப்பிடுகிறார். தேவலோகத்தில் உள்ள இந்த மரத்திடம் யார் என்ன நினைத்தாலும் அதை அப்படியே கொடுக்கும். அதைப் போல பக்தர்களுக்கு கேட்ட வரம் தருபவராக குருவாயூரப்பன் விளங்குகிறார்.