நேற்று காலை 7:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் யாகசாலைக்கு எழுந்தருளினார். அங்கு எஜமானார் சங்கல்பம், புண்யாகவாசனம், மஹாசாந்தி ஹாமம், திருமஞ்சனம், பூர்ணாஹூதி, திருவாராதனம் சாத்துமுறை மற்றும் சிறப்பு பூஜைகளை ராஜா மற்றும் பாலாஜி பட்டர்கள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று 108 கலசபூஜை , நாளை (ஜன.24) விசஷ திருமஞ்சனம் மற்றும் ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்காவன் செய்திருந்தனர்.