பரமக்குடி: பரமக்குடி, நயினார்கோவில் பகுதிகளில் ஜன., 28 அன்று தைப்பூச விழா நடக்க உள்ளது.
பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் சவுந்தரநாயகி சமேத நாகநாதசுவாமி கோயிலில் ஜன., 28 அன்று காலை 8:00 மணிக்கு சுவாமி - அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி வலம் வருவர். அப்போது அக்கிரமேசி கிராம எல்லையில் உள்ள, சிறகிக்கோட்டை - மஞ்சக்கொல்லை வைகை ஆற்றங்கரையில் உள்ள குணநதீஸ்வரர் கோயிலில் அருள்பாலிப்பார்.
தொடர்ந்து பகல் 12:15 மணிக்கு சுவாமி- அம்பாள் வைகை ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி நடைபெறும். அப்போது கிராம மக்கள் தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருட்களை சுவாமிக்கு படைப்பார்கள். பின்னர் இரவு 8:00 மணிக்கு சுவாமி கோயிலை அடைவார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன், நயினார்கோவில் சரக பொறுப்பாளர் வைரவர் சுப்பிரமணியன் செய்து வருகிறார். *இதேபோல் பரமக்குடி ஈஸ்வரன் கோயில், விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி வீதி வலம் வருவார். மேலும் பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.