பதிவு செய்த நாள்
24
ஜன
2021
07:01
மயிலம் : மயிலம் முருகர் கோவிலில் தை மாத கிருத்திகை உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் நேற்று தை கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.காலை 11:00 மணிக்கு பால், தயிர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை பொம்மபுர ஆதீனத் திருமடத்தினர் செய்திருந்தனர்.