மதுரை : மதுரை அயிலாங்குடி ஏ.பி. டவுன் ஷிப் லட்சுமி வராகர் கோயிலில் 9வது ஆண்டு பிரதிஷ்டா தின விழா இன்று நடைபெற்றது. பிரதிஷ்டா விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 8:15 மணிக்கு வராகப் பெருமாளுக்கு விசேஷ சங்கல்ப புண்யாக வாசனம், வேத திவ்ய பிரபந்த பாராயணம், திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.