மன்னரான குலசேகரர் தினமும் அடியார்களுடன் சேர்ந்து ராம பிரானை வழிபட்டார். இதை விரும்பாத மந்திரி, அரண்மனையில் இருந்த ரத்தின மாலையை ஒளித்து வைத்து, அடியார்கள் மீது பழி சுமத்தினார். திருடனைக் கண்டுபிடிக்க, “ பாம்பு அடைக்கப்பட்ட குடத்தில் கை விட்டு, ‘ரத்தின மாலையை எடுக்கவில்லை’ என அடியார் அனைவரும் சத்தியம் செய்யவும் ஏற்பாடு செய்தார். மன்னரும் சம்மதித்தார். அடியார்கள் முன்னிலையில் மன்னர், “அடியவர்களான இவர்கள் நேர்மை மிக்கவர்கள் என்பது சத்தியம் என்றால் பாம்பு என்னைத் தீண்டாது” என்று சொல்லி குடத்திற்குள் கையை விட்டார். கடவுளின் அருளால் பாம்பும் அவரைத் தீண்டவில்லை. பதறிப் போன அமைச்சர், மாலையை ஒப்படைத்ததோடு தன்னை மன்னிக்குமாறு மன்னரிடம் வேண்டினார். இந்த மன்னரே குலசேகராழ்வார் என்னும் ஆழ்வார்களில் ஒருவராகத் திகழ்கிறார்.