* எதற்கும் உணர்ச்சிவசப்படாதீர்கள். மனதை உங்களின் வசமாக்குங்கள். * நற்குணம் கொண்டவர் வாழும் குடும்பம் கோயிலுக்கு நிகராகும். * சத்தியவழி தவறாத நல்லவர் வாழ்வில் அமைதி தவழும். * மனதில் கட்டுப்பாடு இருந்தால் லட்சியத்தை விரைவாக அடையலாம். * ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக உயிரையும் தியாகம் செய்யுங்கள். * கருணையே உயர்வான குணம்; குற்றத்தை மன்னிப்பதே மகத்தான ஆற்றல். * மன அமைதி இழக்காத மனிதர்களை தோல்வி நாடுவதில்லை. * பணிவும் எளிமையும் இருந்தால் தெய்வம் உங்களைத் தேடி வரும். * பிறவிக்கடலை தாண்டிச் செல்ல இரண்டே வழிகள். ஒன்று நல்லவர் நட்பு, மற்றொன்று நல்ல நுால்கள். * எந்த நிலையில் இருந்தாலும் கடவுளை குறை சொல்லாதீர்கள். * உங்களுக்கு எது நல்லது, எது கெட்டது என அறிந்தவர் கடவுள் ஒருவரே. * பெயர், புகழ், பணம் எனும் ஆசைகளை விட்டு விட்டால் அன்பை உணர முடியும். * பக்தனின் மன பக்குவத்திற்கு ஏற்ப கடவுளின் அருள் கிடைக்கும். * இரக்கம், அடக்கம், வாய்மை, நேர்மை, துாய்மை ஆகியவை ஆன்மிகவாழ்வின் ஆதாரங்கள்.