ஒருமுறை நாயகம் ஒரு வீட்டில் குவளை நிறைய தண்ணீர் வாங்கினார். அதைக் குடித்ததும், ‘‘நான் இப்போது நன்றி சொல்லாவிட்டால் மறுமை நாளில் இதைக் குறித்து இறைவன் கேள்வி கேட்பான்’’ என்றார். உலகில் தண்ணீரைப் போல உயர்ந்த பொருள் இல்லை. மயக்க நிலையில் கிடக்கும் ஒருவர் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறார்கள். உடனே அவர் கண் விழிக்கிறார். அவருக்கு சிறிது தண்ணீர் புகட்டுகிறார்கள். அவர் சுதாரித்துக் கொண்டு எழுந்து நடக்கிறார். ஆனால் சிலர் தண்ணீரை அற்பமாக கருதுபவர்கள், ‘‘சாதாரண தண்ணீரைத்தானே கொடுத்தார். இது என்ன பெரிய விஷயம்! பொன்னையும், பொருளையுமா அள்ளிக் கொடுத்தார்’’ என நினைப்பார்கள். இறைவனின் படைப்பில் எந்த பொருளும் அற்பமானது அல்ல.