பணத்தின் மீது கவனம் செலுத்துவது மண்ணுலகத்தைப் பொறுத்தவரை இன்பமாகத் தெரியும். ஆனால் மறுமை நாளில் இந்த பணத்தாசை நரகத்தில் தள்ளி விடும். ‘‘மறுமை நாளில் இறைவன் முன் நிறுத்தப்படும் போது பணத்தை விரும்பியவன் ஆட்டுக்குட்டியைப் போல பயத்துடன் இருப்பான். அப்போது, ‘நான் உனக்கு செல்வத்தை தந்து உதவி செய்தேனே. என்ன செய்தாய்?’ என கேள்வி கேட்கப்படும். ‘இறைவா! பணத்தை பன்மடங்காகப் பெருக்கினேன். பூமியிலேயே அதை விட்டு விட்டு வந்து விட்டேன்’’ என்பான். ‘ நீ மறுமை நாளுக்காக என்ன செய்தாய் அதைச் சொல்’’ என அடுத்த கேள்வி வரும், பதில் சொல்ல முடியாமல் தவிப்பான். இறுதியில் நரகத்தில் தள்ளப்படுவான்’’ என்கிறார். சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமானால் வாழும் காலத்திலேயே கிடைத்த பணம், பொருள் வசதிகளைக் கொண்டு பிறருக்கு நன்மை செய்ய வேண்டும். பசித்தோருக்கு ஒருவேளை உணவாவது தர்மம் செய்ய வேண்டும். ஏழ்மையில் வாடும் மாணவர்களுக்கு கல்வி உதவி செய்ய வேண்டும்.