சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சுகபோக வாழ்விற்கு அதிபதி சுக்கிர பகவான். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் ஆடம்பர வாழ்வு அமையும். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 3, 6, 8, 12 ஆகிய ராசிகளில் மறைந்தால் யோகபலன் குறையும். இதற்கான பரிகாரம் செய்தால் வாழ்வு மேம்படும். வெள்ளிக்கிழமை மாலையில் விளக்கேற்றி லட்சுமி தாயாருக்கு வெண்பொங்கல், வெள்ளை மொச்சை, சுண்டல் நைவேத்யம் மகாலட்சுமி துதி, மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்ரம் சொல்லி வழிபடலாம். வெள்ளிக்கிழமையன்று சிவாலய தரிசனம், அடியார்களுக்கு அன்னமிடுவது நல்லது. சுக்கிரனுக்கு உகந்த பவுர்ணமி பூஜை, சுவாசினி பூஜை, குமாரி பூஜை, பூச நட்சத்திரத்தன்று செய்யப்படும் புஷ்ய பூஜைகளை செய்வதும் பங்கேற்பதும் நன்மை தரும். சுக்கிரனின் ஸ்லோகத்தை பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தன்றோ அல்லது வெள்ளிக்கிழமையிலோ 16 முறை சொல்வது மிகவும் நல்லது. ஹிம்குந்த ம்ருணாலாபம்தைத்யானாம் பரமம் குருசர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம்பார்க்கவம் ப்ரணமாம் யஹம் பனித்துளி, முல்லை, தாமரை போன்ற மலர்களைப் போல வெண்ணிறம் கொண்டவரே! அசுரர்களின் குருவாக திகழ்பவரே! சாஸ்திர ஞானத்தில் வல்லவரே! பிருகு முனிவரின் புதல்வரே! சுக்கிர பகவானே! உம்மை போற்றுகிறேன்.