பதிவு செய்த நாள்
27
பிப்
2021
02:02
ஆனைமலை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி, விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவை, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த, 11ம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி நள்ளிரவு மயான பூஜை, 25ம் தேதி சக்தி கும்பஸ்தாபனம் நடந்தது. நேற்று காலை, 9:30 மணிக்கு குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முறைதாரர்கள், அருளாளிகள் குண்டம் கட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று, காலை, 8:30 மணிக்கு நடந்தது. விரதமிருந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து, நாளை, 28ம் தேதி காலை, 8:00 மணிக்கு கொடி இறக்குதல், மார்ச், 1ம் தேதி காலை, 11:30 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.