திருக்கோஷ்டியூரில் தெப்ப உற்சவம் கோலாகலம்: குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2021 06:02
திருக்கோஷ்டியூர் :திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இக்கோயிலில் மாசித் தெப்பஉத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். பிப்.18 ல் துவங்கிய உற்சவத்தில் தினசரி காலை, இரவில் பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.நேற்று காலை 7:00 மணிக்கு குழந்தை கண்ணன் கோலத்தில் வெண்ணெய்த் தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து தெப்பக்குளக்கரை மண்டபம் நோக்கு திருவீதி உலா புறப்படும். வழியில் பக்தர்கள் வழிபாடு நடைபெறும். மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் காலை 12:00 மணிக்கு மேல் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெற்றது. பின்னர் இரவு 9:30 மணி வரை மண்டபத்தில் வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிப்பார். பின்னர் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. இன்று காலை 6:30 மணிக்கு தங்கப் பல்லக்கில் பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவியருடன் தெப்பக்குள மண்டபத்திற்கு திருவீதி புறப்பாடு துவங்கியது. வழியில் பக்தர்கள் பட்டு சார்த்துதலும், அர்ச்சனை வழிபாடும் நடைபெற்றது. காலை 10:50 மணிக்கு பெருமாள் தெப்பம் எழுந்தருளலும், தொடர்ந்து குளத்தை வலம் வருதலும் நடைபெற்றது. மீண்டும் தெப்பம் மண்டபம் எழுந்தருளி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் இரவு 9:00 மணிக்குமீண்டும் தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி தெப்பம் வலம் வருதல் நடைபெறும். பிப்.28 காலையில் தீர்த்தவாரியும், மாலையில் தங்கப்பல்லக்கில் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும்.