பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமம் கருமலையான் கோயிலில் மாசி களரி திருவிழா நடந்தது. இக்கோயிலில் அருள்பாலிக்கும் கருமலையான், முனியப்பசாமி, பாப்பாத்தி அம்மன் உள்ளிட்ட சாமியாடிகள் பொதுமக்களுக்கு மஞ்சள் பூசி அருள்வாக்கு வழங்கினர். முன்னதாக கருமலையானுக்கு கருங்குட்டி செங்குட்டி கரும்பு குடித்தல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பொங்கல் வைத்தும், பக்தர்கள் கரும்பு தொட்டிகளை சுமந்து வந்து சுவாமிக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் சாமியாடிகள் கிராமத்தில் ஊர்வலமாக வந்த போது தேங்காயை உடைத்து தரிசித்து அருளாசி பெற்றனர். நிகழ்ச்சியில் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன், கிராம தலைவர் ராமு, செயலாளர் சௌந்தரபாண்டியன், பொருளாளர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து உள்ளிட்ட கிராம பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.