* நாக்கில் நேர்மை இருந்தால் இதயமும் நேர்வழியில் செல்லும். * செயலில் ஈடுபடும் முன் விளைவு குறித்து யோசியுங்கள். * ஒழுக்கமுடன் வாழ்பவர்களே மக்களில் சிறந்தவர்கள். * போதுமென்ற மனப்பான்மை கொண்டவராக இருங்கள் * உங்களுக்காக எதை விரும்புகிறீர்களோ அதையே மற்றவர்களுக்கும் விரும்புங்கள். * உண்மையை மறைத்து பொய் சொல்பவரை இறைவன் நேசிப்பதில்லை. * பேராசையால் பணத்திற்காக மட்டும் திருமணம் செய்யாதீர்கள். * பெரியவர்களை மதிக்காதவர்கள் எம்மைச் சேர்ந்தவர் அல்ல. * வரவுக்குத் தக்கபடி செலவு செய்தால் ஏழ்மை உண்டாகாது. * ஆடம்பர வாழ்வில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள். பொன்மொழிகள்