பதிவு செய்த நாள்
03
மார்
2021
10:03
திருவாரூர் : திருவாரூர் அருகே, செம்மங்குடி கோவிலில், நேற்று மஹாமேரு மஹோற்சவம் நடந்தது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, செம்மங்குடி ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் மஹாமேரு மஹோற்சவம் நடக்கிறது. நேற்று முன்தினம், மஹாமேரு, 23ம் ஆண்டு சம்வத்சராபிஷேக மஹோற்சவம், மாலை, 4:00 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது.நேற்று காலை, 7:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை, காலை, 9:00 மணிக்கு, ஆனந்தவல்லி மற்றும் மஹாமேருவிற்கு மஹாபிஷேகம் நடந்தது.
காலை, 9:30 மணிக்கு கடம் புறப்பாடு; 10:00 மணிக்கு, சுவாமிக்கும், மஹாமேருவிற்கும் கலச அபிஷேகம், மாலை, 4:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, கிளி வாகனத்தில், உற்சவர் பிரகார புறப்பாடு, 7:30 மணிக்கு, வித்யா நவாவரண பூஜை நடந்தது. இன்று காலை, 8:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், 11:30 மணிக்கு, திருக்கல்யாண கோலத்தில், பக்தர்களுக்கு சுவாமி காட்சியளிக்கிறார்.ஏற்பாடுகளை, செம்மங்குடி ஆனந்தவல்லி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.