சித்தானந்த சுவாமி கோவிலில் மகாசங்கட ஹர சதுர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2021 01:03
புதுச்சேரி : சித்தானந்த சுவாமி கோவிலில், மகா சங்கடஹர சதுர்த்தி விழா நேற்று நடந்தது. கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் உள்ள சுந்தர விநாயகர் சன்னிதியில், மகா சங்கடஹர சதுர்த்தி விழா நேற்று நடந்தது .விழாவை முன்னிட்டு, கலச பிரதிஷ்டை செய்து, மாலை 5.30 மணியளவில் மகா கணபதி ஹோமம் நடந்தது.காலை 7.30 மணிக்கு, சுந்தர விநாயகருக்கு மங்கள திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின், சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன், தேவசேனாதிபதி குருக்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.