காரைக்கால் : காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா நடந்தது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு நடந்த தெப்பத் திருவிழாவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள், திருக்குளத்தில் சந்திர புஷ்கரணியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அசனா எம்.எல்.ஏ., அறங்காவலர் குழுத் தலைவர் கேசவன், செயலாளர் பக்கிரிசாமி, துணைத் தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ரஞ்சன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.திடீர் தீவிபத்துதெப்பத் திருவிழாவை முன்னிட்டு கோவில் பின்புறமுள்ள தோப்பில் வாண வேடிக்கை நடந்தது. காய்ந்த செடிகளில் தீப்பொறிகள் விழுந்து எரிந்தது. தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.