பதிவு செய்த நாள்
03
மார்
2021
03:03
வால்பாறை: வால்பாறை கோவில்களில், மாசி மாத சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், மாசி மாதம் சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி, நேற்று மாலை, 6:00 மணிக்கு விநாயகருக்கு, பால், தயிர், பன்னீர், விபூதி, இளநீர், நெய், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட, 16 வகையான பொருட்கள் கொண்டு, சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது.தொடர்ந்து, மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.