பொய்யாமொழி விநாயகருக்கு கலச மற்றும் 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2021 03:03
புதுச்சேரி : தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு கலச மற்றும் 108 சங்காபிேஷகம் நடந்தது.
புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் கடந்த 27ம் தேதி நடந்த மாசி மகம் தீர்த்த வாரியில், தீவனுார் பொய்யாமொழி விநாயகர் பங்கேற்றார். தீர்த்தவாரிக்கு பிறகு, புது சாரம் சித்தி புத்தி விஜய கணபதி கோவிலில் தங்கி அருள்பாலித்தார். சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, பொய்யாமொழி விநாயகருக்கு, சாரம் மாசி மகம் வரவேற்பு குழு சார்பில், நேற்று காலை 9 மணிக்கு, கணபதி ஹோமம், கலசம் மற்றும் 108 சங்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பின், சாரம் மாசி மகம் வரவேற்பு குழு செயலாளர் ரவி குடும்பத்தினர், 1.5 கிலோவில் செய்த வெள்ளி கவசம் வழங்கினர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.