பாம்பனில் விவேகானந்தர் மண்டபம் மின்னொளியில் ஜொலித்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2021 06:03
ராமேஸ்வரம் : பாம்பனில் ரூ.4.50 கோடியில் அமைத்த ஒலி, ஒளி கூடத்தால் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மின்னொளியில் ஜொலித்தது.
1897ல் வெளிநாடு ஆன்மிக சுற்றுப்பயணம் முடித்த சுவாமி விவேகானந்தர் பாம்பன் குந்துகால் கடற்கரையில் வந்திறங்கினார். இதனை நினைவு கூறும் விதமாக குந்துகால் கடற்கரையில் ராமகிருஷ்ண தபோவனம் சார்பில் அங்குசுவாமி விவேகானந்தருக்குநினைவு மண்டபம் அமைத்தனர்.இந்த வரலாற்று இடத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில், 2019ல் நினைவு மண்டபம் முன் மத்திய அரசு ரூ.4.50 கோடியில் ஒலி, ஒளி கூடம் அமைத்தனர். சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு படங்களை நினைவு மண்டபம் மீது ஒலி, ஒளி காட்சியாக ஒளிர செய்து, சுற்றுலா பயணிகள் ரசிக்க ஏற்பாடு செய்தனர்.நேற்று முன்தினம் குந்துகால் நினைவு மண்டபத்தில் சுற்றுலாதுறையினர் நடத்திய சோதனை ஓட்டத்தில், விவேகானந்தர் நினைவு மண்டபம் மின்னொளியில் ஜொலித்தது. மேலும் விவேகானந்தரின் வரலாற்று படங்களை ஒளிபரப்பி ஆய்வு செய்தனர். இன்னும் சில வாரங்களுக்கு பின் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் மாலை 6:30 முதல் 7:30 மணி வரை ஒலி, ஒளி காட்சி நடக்கும் என சுற்றுலாதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.