பதிவு செய்த நாள்
04
மார்
2021
04:03
விழுப்புரம்; விழுப்புரம் பூந்தோட்டம் சின்னப்பா லே அவுட் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவையொட்டி, கடந்த 1-ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை, பூர்ணாஹூதி, வாஸ்துசாந்தி, முதல் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜை, பாவாடைராயர் கரிகோலம், கண் திறத்தல் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, யந்திர ஸ்தாபனம் நடந்தது.நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, கடம் புறப்பாடு மற்றும் காலை 9:45 மணியளவில் கோவில் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சேகர், ஆனந்தன், காசிநாதன், பொதுமக்கள் செய்திருந்தனர்.