சபரிமலை: சித்திரை விஷூ பூஜைகளுக்காக இன்று மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஏப்.,14 அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் விஷூக்கனி தரிசனம் நடைபெறும்.
மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறக்கிறார். தொடர்ந்து ஊழியர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். பக்தர்களுக்கு அனுமதியில்லை. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.அதன்பின் நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நெய்யபிேஷகம் , வழக்கமான பூஜைகள் துவங்கும். ஏப்.,18 வரை அனைத்து நாட்களிலும் காலை முதல் இரவு வரை கணபதிேஹாமம், உஷபூஜை, உச்சபூஜை, களபாபிேஷகம், மாலையில் தீபாராதனை, இரவு படிபூஜை, அத்தாழபூஜை ஆகியவை நடைபெறும். ஏப்.,18 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை முதல் ஏப்.,18 வரை ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவர்கள் 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டீவ் சான்றிதழுடன் செல்ல வேண்டும்.