செங்கழுநீரம்மன் கோவிலில் 16ம் தேதி செடல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2021 05:04
புதுச்சேரி : அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் செடல் தேர்திருவிழா வரும் 16 ம் தேதி நடக்கிறது.
அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் 107 ம் ஆண்டு செடல் தேர்த் திருவிழா 8ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றம் அபிேஷக ஆராதனைகளுடன் துவங்கியது. தொடர்ந்து காத்தவராயன் சுவாமிக்கு கும்பம் படையல், புற்றுமண் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. இரவில் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள் பாலித்தார். வரும் 15 ம் தேதி வரை தினம் அம்மனுக்கு அபிேஷக ஆராதனை, சுவாமி வீதியுலா நடக்கிறது. செடல் தேர் திருவிழா 16ம் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. 17 ம் தேதி சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு, 23 ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.