Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) ... கன்னி: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் கன்னி: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
சிம்மம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்
எழுத்தின் அளவு:
சிம்மம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2021
10:04

மகம்: இயல்பை விடச் சிறப்பாக இருக்கும்.
பொதுவாக இந்த  புத்தாண்டு சென்ற ஆண்டைவிட சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை. இதுவரை பல தடைகளையும், தாமதங்களையும் சந்தித்து வந்த நீங்கள் அதில் இருந்து மெல்ல மீண்டு வர போகிறீர்கள். வருகின்ற புதிய ஆண்டு மிகவும் உற்சாகமாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும். வாழ்க்கை பற்றிய தைரியம் அதிகரிக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் நல்ல பல மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு நீங்கள் திட்டமிட்டபடி பல வேலைகளைச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.  இந்த ஆண்டு உங்களின் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். மன அழுத்தத்திலிருந்து மீளுவீர்கள். எதையும் சுலபமாக வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை முதல் முறையாக வரும்.

நிதி:
பொருளாதார வாழ்க்கையைப் பொருத்தவரை, இந்த ஆண்டு இயல்பை விட சற்று சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் பல சவால்கள் இருக்கும், இது உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். ஆரம்பத்தில், பொருளாதார விஷயங்களில் பலவீனம் இருக்கும். இருப்பினும், உங்கள் நிதி வாழ்க்கையை மேம்படுத்த உங்கள் கடின உழைப்பு உதவுவதால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பெரிய சொத்து போன்ற விஷயங்களுக்காகச் செலவு செய்வது பற்றி நன்கு யோசித்து முடிவெடுங்கள். பிற்பாடு மாதா மாதம் அதற்கான தவணைத் தொகையைக் கட்ட வேண்டிவரும்போது சமாளிக்க முடியுமா என்று யோசியுங்கள்.

குடும்பம்:
குடும்பத்தில் சந்தோஷமில்லாத நிலை இல்லாமல் இருந்தது. குடும்ப ஸ்தானத்துக்கு குரு பார்வை கிடைத்திருப்பதால் அந்தப்பார்வை சந்தோஷத்தைக் கொடுக்க ஆரம்பிக்கும். குடும்ப சம்பந்தமான பிரச்னை எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். அதனால் பிரச்னைகள் தீர்ந்து, குறைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.  முன்பைவிட இப்போதேல்லாம் நீங்களும் குடும்ப உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். இதனால் புரிதல் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களுக்காக அதிக நேரம் செலவழித்து அவர்களின் அன்பைப் பெறுவீர்கள்.  

கல்வி:
அதிகக் கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் பயில்வோருக்கு இந்த ஆண்டு பொற்காலமாகவே அமையும். கேது உங்களின் மேல்படிப்புக்கு உதவப்போகிறார். அறிவாற்றல் அதிகரிக்கும். முன்பு குழப்பத்துடன் பயின்றவர்கள் இப்போது புரிதலுடன் படித்து முன்னேறுவீர்கள். மாணவர்களைவிட மாணவிகளுக்கு சற்று அதிக கவனச் சிதறல் இருக்க வாய்ப்பிருப்பதால் கவனத்தைக் குவிக்க முயற்சி செய்வது நல்லது. கல்விக் கடன் சுலபமாகக் கிடைப்பதோடு வெளிநாட்டுக்கு மேற்படிப்புக்கு வேண்டிய விசா போன்றவையும் சுலபமாகக் கிடைக்கும்.

பெண்கள்:

எதையும் யாரையும் அவசரப்பட்டு நம்ப வேண்டாம். ஆழ்ந்து யோசித்து முடிவெடுங்கள். குறிப்பாகப் பணவிஷயத்தில் கவனமாக இருங்கள். அக்கம் பக்கத்தினருடன் உறவு அழகாகும். நட்பு வட்டத்தில் நீங்கள் பெருமிதமாக வளையவருமளவு உங்கள் திறமை வெளிப்படும். அழகுணர்ச்சியுடன் எந்தச் செயலையும் செய்வீர்கள். அதே சமயம் கம்பீரமான நிர்வாகத்திறமை மேம்படும்.


உடல் நிலை:
மிக கவனமாக இருந்துவிட்டால் போதும். பிரச்னை ஏதும் இருக்காது. ஏற்கனவே உஷ்ணாதிக்கம் அதிகம் உள்ள நபர் நீங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் . வானத்தில் அதிகவேகமாகச் செல்ல வேண்டாம். இதுவரை உங்கள் உடல் நலனிலிருந்த பிரச்னைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். ஆரோக்கியம் சிறக்க தினமும் எளிய உடற்பயிற்சிகளைச் செய்து வருவது அவசியம்.

தொழில்/பணி:
செய் தொழிலில் லாபம் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயரும். சம்பளம் அதிகரிக்கும். முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். புதிய தொழில் முயற்சி நல்ல பலனை தரும். தந்தை வழி சொத்துக்களில் பலன் உண்டாகும்.உயர்பதவிக்காக எடுத்த முயற்சிகள் கைகூடும். சிறிய முதலீட்டில் புதிய தொழில் ஒன்றை தொடங்கி அதில் ஜெயிப்பீர்கள். கமிஷன் தொழிலை நேர்மையற்ற முறையில் செய்பவர்களுக்குச் சில ஏமாற்றங்கள் வரும். புதிய நண்பர் யாரேனும் புதிய முதலீட்டுக்கு வற்புறுத்தினால் அதைப் பற்றிச் சந்தேகப்படுவது நல்லது.

பரிகாரம்:
குரு தட்சிணாமூர்த்தியை வணங்கி உயர்வு பெறுங்கள்.
பாடல்:
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே

பூரம்: நிறையப் பணம் வரும்.
பொதுவாக வாழ்வில் முன்னோக்கிச் செல்வீர்கள். வம்பு வழக்குகள் தீரும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இழந்த சொத்துக்களை திரும்ப பெறும் வாய்ப்பு உண்டு. கடன் பிரச்னைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீடு கட்டுவதில் இருந்த தடை அகலும். புது வீடு கட்டி அல்லது வீடு வாங்கிக் அதில் குடி ஏறுவீர்கள். பணியிடத்தில் இருந்த மந்த நிலை மாறும்.  நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். தொழில், வியாபாரம் சீராக நடைபெறும். தன்னம்பிக்கையோடு உங்கள் செயல்களை செய்ய தொடங்குவீர்கள். வெளியூரில் வசிப்பவர்கள் சந்தோஷப் பயணமாக சொந்த ஊர் வருவார்கள். எல்லா சூழ்நிலைகளையும் சமாளித்து விடுவீர்கள்.

நிதி:
வரவேண்டிய பணத்தை அழகாகவும் மென்மையாகவும் பேசி வசூல் செய்வீர்கள். தொழில் கை கொடுக்கும். வியாபாரிகளுக்கு நல்ல தன லாபம் கிடைக்கும். அதிகமாக கடன் வாங்காமல் இருந்தால் நன்மை உண்டாகும். தீயபழக்கங்கள் காரணமாகப் பணத்தை எங்கும் கோட்டைவிடாமல் இருக்கப்பாருங்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பால் உங்களின் சேமிப்பு மட்டுமின்றிக் குடும்பத்தினரின் சேமிப்பும் அதிகரிக்கும். ஒன்றிற்கு மேற்பட்ட வழிகளில் வருமானமும் லாபமும் வரும். ஒரு வேலையில் இருந்துகொண்டே இரண்டாவது தொழில் செய்வீர்கள். குளிர் தேசங்களில் உள்ள குடும்ப உறுப்பினரிடமிருந்து பணம் வரும். கலைத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டுக் கூடுதல் வருமானம் வரும்.

குடும்பம்:        
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் பங்கு பெறுவீர்கள். மகன் அல்லது மகளுக்கு திருமண யோகம் கை கூடி வரும். கணவர்/ மனைவி வழி உறவினர்  மூலம் மகிழ்ச்சி  உண்டாகும். குடும்ப விசேஷம் ஒன்றில் எதிர்பாராத நபர்களின் உதவிகள் கிடைக்கும். தாய் வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே  திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். ஆனால் அது வந்த வேகத்தில் மறையும். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும்.பெண்கள் சிக்கலான பிரச்னைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவர். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும்.

கல்வி:
பெற்றவர்களின் ஆலோசனை பிள்ளைகளுக்குக் கல்வியில் அதிகமாக உதவும். கடந்த சில வருடங்களாக கல்வி பற்றி சிறு ஏமாற்றங்களும் சறுக்கல்களும் இருந்ததால் தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தீர்கள். அவ்வப்போது கிடைத்த சின்னஞ்சிறு வெற்றிகள் உங்களை வழி நடத்திக் கொண்டிருந்தன. ஆனால் இந்த ஆண்டு தொடர் வெற்றிகள் கண்டு நம்பிக்கையின் உச்சத்திற்கு செல்வீர்கள். குறிப்பாக வெளிநாட்டு கல்வி பற்றிய நம்பிக்கையுடன் இருந்தவர்களுக்கு ஏமாற்றமில்லை. ஏற்கனவே வெளிநாட்டில் கல்வி பயின்றுகொண்டிருப்பவர்கள் மேலும் சாதித்து மகிழ்வீர்கள்.

பெண்கள்:
எதையும் தீர விசாரித்துவிட்டு யாரைப்பற்றியும் முடிவெடுங்கள். அப்பாவிகளைச் சந்தேகிப்பதற்கு மற்றவர்களின் சூழ்ச்சி காரணமாக இருகக வேண்டாம். திருமண அதிர்ஷ்டம் கை கூடி வரும். உடல் ஆரோக்யம் அற்புதமாக அமையும். நம்பிக்கை அதிகரிக்கும். எங்கும் எதிலும் சந்தோஷமான நன்மை உண்டாவதால் வாழ்க்கை மீது பிடிப்பு வரும்.

உடல் நிலை:
உடல்நிலை எப்போதும்போல் சீராகத்தான் இருக்கும். கடந்த ஆண்டு இருந்த சிரமங்கள் கூட இந்த ஆண்டு கட்டாயம் இருக்காது. ஒருவேளை உங்களுடைய சீரற்ற உணவுப் பழக்கங்கள் காரணமாக சில சிரமங்கள் ஏற்படக்கூடும். அதற்கு மருந்து உட்கொள்வதை விட உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே போதும்.

தொழில்/பணி:
அலுவலகத்தில் சற்று நிதானப்போக்கு இருக்கும். ஆனால் மாற்றம் வரும்போது அது திடீர் மாற்றமாக இருக்கும்.  உச்ச பதவியில் இருப்பவரின் தயவு உண்டு. எதிர்பார்த்த பெரிய ஆர்டர் கிடைப்பதால் கொண்டாட்டமான மகிழ்ச்சி உண்டாகும். உங்களுக்குக் கீழேவேலை செய்யும் பணியாளர்கள்  நன்கு ஒத்துழைப்பதால் உங்களுக்கு மேலிடத்தில் பாராட்டுக்கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். நிறைய தனலாபம் உண்டாகும். கலைத்துறையினருக்கு உலக அளவில் புகழும் பாராட்டுக்களும் கிடைக்கும். உங்கள் எண்ணங்கள், திட்டங்கள் எல்லாம் சாதகமாக கூடிவரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு, சலுகைகள் கிடைக்கும்.

பரிகாரம்:
சிவனைத் துதித்தால் நற்பலன்கள் பெறலாம்.
பாடல்:
செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.

உத்திரம்,1 ம் பாதம்: குடும்பத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு.

பொதுவாக உங்களது செயல்கள் வேகமாகஇருக்கும், வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவீர்கள். உங்களது இயற்கை குணமான படபடப்பு, அவசரம், ஆகியவற்றை ஓரங்கட்டி வைத்துவிட்டு இந்த ஆண்டு நிதானப்போக்குடன் செயல்படுவீர்கள்.. எடுத்த வேலையை முடிக்கும் வரை உங்களது கவனம் சிதறாமல் இருப்பது அதிக நன்மைகளை அளிக்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம்.  ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு. வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும்.

நிதி:
பொதுவாக இவ்வருடத்தில் அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியாது. உழைப்பு ஒன்றே உங்களுக்கு உயர்வினைத் தரும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். உண்மையான உழைப்பிற்கு எந்த வகையிலும் இடையூறு நேராது. அயராத உழைப்பினால் அசாத்தியமான வெற்றியைக் காண்பீர்கள்./ வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். பொருள் சேர்க்கை ஏற்படும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். முன்பிருந்த அதே நிலைதான் பணியாளர்களுக்கு இருக்கும் என்றாலும் போனஸ் போன்ற இனங்களில் ஒரே வருமானமாக இந்த வருடம் ஒரு நல்ல தொகை வரும். வழக்கமான சம்பளம் போன்றவைகூட சிறு தாமதத்துக்குப் பின் ஓரிருமுறை வரும். மற்றபடி பயப்படும் அளவு எந்த நிதிப்பற்றாக்குறையும் இருக்காது. சேமிக்குப் பழக்கம் உள்ளவர்களுக்கு இன்னும் நல்ல ஆண்டு இது.

குடும்பம்:
தந்தையுடனான மோதல்கள் விலகும். அவருக்கிருந்த நோய் விலகும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக புதிய திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிறைய நடைபெறும். உடன்பிறந்தவர்களால் ஒற்றுமை பலப்படும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் பிள்ளைகளின் கல்யாண முயற்சிகள் கைகூடும். தாய் மற்றும் சகோதரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். தாய் வீட்டில் ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்க வரவேற்பு கிடைக்கும். அண்ணன் தம்பியால் உங்களின் கௌரவம் உயரும்.

கல்வி:
மாணவர்களின் கல்வித்தரமானது இந்த வருடத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலையில் இருந்து வந்தாலும் முனைந்து படிப்போருக்குப் பிரச்னை இல்லை.. ஆராய்ச்சித்துறையில் இருக்கும் உயர்கல்வி மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயலாஜி மற்றும் மருத்துவத்துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். அவசரப்படாமல் நிதானமாக விடையளித்து வெற்றி காண்பீர்கள்.  நீங்கள் எதிர்பார்த்த உயர்வை அடைவீர்கள். புதிய துறையில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு பயந்த அளவு இல்லாமல் சுலபமாக இருப்பதால் நிம்மதி காண்பீர்கள்.

பெண்கள்:
பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். மனதில் மறைக்கத்தெரியாமல் வெளிப்படையாக பேசி விவகாரங்களில் சிக்கிய நிலை மாறி,  இனி இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவீர்கள். காத்திருந்ததற்கேற்ப நல்ல கணவர் வந்தமைவார்.திருமண வாய்ப்புகள் கைகூடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். மனதில் இருந்த பாரம் குறைந்து மகிழ்ச்சி கூடும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் விலகும்.

உடல் நிலை:
கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது அவசியம். சரியான நேரத்தில், ஆரோக்ய உணவைச்  சாப்பிடுவதால் உடல் பலவீனத்தைத் தவிர்க்கலாம். பொதுவாக இந்த வருடம் நல்லமுறையில் உடல் நிலை நிலவும். எனினும் ஓரிரண்டு சிறிய சிரமங்களை அனுபவித்து உடனுக்குடன் அதிலிருந்து மீளுவீர்கள். சரிவிகிதமான சத்தான உணவு சாப்பிடுவதால் சிரமமின்றி ஆரோக்யம் காப்பீர்கள்.

தொழில்/பணி:
தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்தளவு லாபங்களைப் பெறுவீர்கள். நீங்கள் எந்தப் பணியை கையில் எடுத்தாலும், அதை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள், இதன் காரணமாக உங்கள் மதிப்பு, மரியாதையும் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு நேரம் சாதகமானதாகவும் மற்றும் சலுகைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ராணுவம், காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. புகழும் விருதுகளும் தேடி வரும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் ஏற்படும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். எதிர்பார்த்த  லோன் தொகை ஜுன் மாதம் கிடைக்கும்.
 
பரிகாரம்:
முருகரை வணங்கி வருடம் முழுக்க வெல்லுங்கள்.

பாடல்:
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar