கொரோனா அச்சமின்றி ஹரித்துவாரில் கும்பமேளா திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2021 09:04
டேராடூன்:உத்தரகண்டில் நடைபெற்று வரும் கும்பமேளா திருவிழாவில் கொரோனா பரவல் அச்சமின்றி ஆயிரக்கணக்கானோர் கங்கை நதியில் புனித நீராடினர்.
உத்தரகண்ட் ஹரித்துவாரில் நடைபெற்று வரும் கும்பமேளா திருவிழாவில் மூன்றாவது முக்கியமான பைசாகி தினத்தையொட்டி நேற்றும் ஆயிரக்கணக்கான சாதுக்களும் பக்தர்களும் புனித கங்கை நதியில் நீராடினர்.ஆனால் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் குளித்தனர்.இதுவரையிலும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கங்கையில் புனித நீராடியதாக கும்பமேளா சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் சஞ்சய் குன்ஜ்யால் தெரிவித்துள்ளார். ஏப்.27ம் தேதி நான்காவது முக்கிய புனித தினம் கடைபிடிக்கப்படுகிறது. அப்போது இதே அளவிலான கூட்டம் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.உத்தரகண்டில் நேற்று முன்தினம் முதன் முறையாக ஒரே நாளில் 1925 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கும்பமேளாவால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.