பதிவு செய்த நாள்
23
ஏப்
2021
06:04
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், சுக்லபட்ச ஏகாதசி விழா நடந்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். ஒவ்வொரு மாதமும் கோவிலில் ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். தமிழ் பிலவ ஆண்டை முன்னிட்டு, சித்திரை மாதத்தில் வந்த, சுக்லபட்ச ஏகாதசி விழா சிறப்பாக நடந்தது. காலையில் கோவில் நடை திறந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், காலசந்தி பூஜைகள் நடந்தன. ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக அரங்கநாத பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு புண்ணிய வசனம், கலச ஆவாஹனம், ஸ்தபன திருமஞ்சனம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து அரங்கநாத பெருமாள் செந்நிற பட்டு உடுத்தி, வெண் பட்டு குடைகளுக்கு மத்தியில், கோவில் வளாகத்தில் வலம் வந்தார். தொடர்ந்து சாற்றுமுறை சேவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், கோவில் செயல் அலுவலர், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.